“Sattappadi Kutram” Movie will guide the people to discriminate the Corrupted Politicians.
“சட்டப்படி குற்றம்” மக்களுக்கு வழிகாட்டும் பகுத்தறிவுப்பாடம்,
அரசாங்கமும்,ரௌடிகளும் என் கையில் நான் சொல்வதுதான் சட்டம், அதை நிறைவேற்ற வேண்டியது காவல் துறை மற்றும் நீதிபதிகளின் கடமை என்று ஆணவம் பிடித்து அலையும் அரசியல் தலைவர்களின் பித்தலாட்டங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டும் படம் “சட்டப்படி குற்றம்”.
காவல் துறை அதிகாரியாக இருந்த போஸ், மந்திரியின் எடுபிடியாக இருந்த ஒருவனை சிறையில் அடைத்து விட்டான் என்ற காரணத்திற்காக, அவன் குடும்பத்தையே அழிக்கிறார் ஒரு அமைச்சர். அவர் செருப்பையே எடுத்து அவரையே அடித்து விட்டு தன பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மந்திரி என்ற பதவியை வைத்து மக்களை பழிவாங்கும் அமைச்சரை எதிர்த்து, காட்டினுள் சென்று புரட்சிக்குரல் எழுப்பி, ஊழலற்ற புதிய சமுதாயம் அமைக்க தலைமை தாங்குகிறான் போஸ். சமுதாய சீர்திருத்த எண்ணம கொண்ட இளைஞர் பட்டாளம் போசின் தலைமையை ஏற்றுக்கொள்கிறது.
சத்தியமங்கலம் காட்டினுள் போஸை பிடிக்கவந்த காவல் துறை அதிகாரியான அவன் நண்பனிடம் தன குடும்பம் மந்திரியால் அழிந்த கதையை எடுத்துக்கூறுகின்றான். நாட்டிலுள்ள அரசியல் வாதிகளின் கைப்பாவைகளான ரௌடிகளை அழிக்க அவன் நண்பனும் உதவி செய்வதாக ஒப்புதல் அளிக்கிறான். அவன் உதவியால் நீதிபதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும், பத்திரிக்கையாளர்களையும் காட்டிற்கு கடத்தி வந்து, மந்திரிகள் அவர்களுடைய சல்லாப வாழ்விற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடித்து சுவிஸ் வங்கிகளில் போடுவதையும், மந்திரிகள் அவர்களை எதிர்ப்பவர்களை ரௌடிகளை வைத்து கொலை செய்வதையும், பின்பு அவர்களை விடுதலை செய்யச்சொல்லி அதிகாரிகளை மிரட்டுவதையும் போஸ் அவர்களுக்கு விளக்குகிறான்.
தியாகிகள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து பெற்றுத்தந்த சுதந்திர இந்தியாவில், இன்றைய மந்திரிகள் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டலுக்குஅரசாங்க அதிகாரிகள் அடிபணியாமல், ரௌடிகளை ஒழித்து அவர்களைத்தூக்குக் கயிற்றில் தொங்கவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். தான் காட்டினுள் வந்திருப்பது தீவிரவாதியாக அல்ல, அமைச்சர்கள் என்ற போர்வையில் நடமாடும் தீவிரவாதிகளை அழிப்பதற்குத்தான் என்று கூறுகிறான். அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்ற விடாமல் தடுத்து, ரௌடிகள் சாம்ராஜ்யத்தை நிறுவ நினைக்கும் கொடியோர் கூட்டத்தை ஒழிக்கவேண்டியதே தன காட்டுவாசத்தின் குறிக்கோள் என்று கூறுகிறான். கபட சாமியார்களும், கோடிக்கணக்கில் ஊழல் புரியும் மந்திரிகளும் நாட்டை நாசப்படுத்தும் தேச விரோதிகள் அவர்களைதுரத்தி அடிப்பதே மக்களுக்குச்செய்யும் புனிதத்தொண்டு ,கடமையாகும் என்று கூறுகிறான்.
அரசுஅதிகாரிகளும் போசின் நியாயமான வாதத்தை ஏற்று ரௌடிகளின் ஒழிப்பில்அமைச்சர்களின் எடுபிடிகளாக மாறாமல் பாடுபட முன் வருகிறார்கள். போஸ் தன்னுடைய இந்த புனித போராட்டத்தில் அவனுடன் இணைந்த வாலிப உயிர்களை பலிகொடுக்க நேர்ந்தாலும் அவன் கண்ட இலட்சியம் நிறைவேறுகிறது.
தமிழக மக்கள் அனைவரும் சட்டப்படி குற்றம் திரைப்படத்தை தவறாமல் பார்த்து, ஊழல் புரியும் அரசியல் வாதிகளையும், அவர்கள் அரவணைப்பில் வாழும் அரசியல் ரௌடிகளின் கூட்டத்தையும் தவறாமல் ஒழிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு வரும் சட்டமன்றத்தேர்தலில் ஊழலற்ற ஆட்சி அமைக்கும் திறமை படைத்தவர்களை, எவருக்கும் அஞ்சாமல் தேர்ந்தெடுக்கவேண்டும்.
நன்றி, வணக்கம்.
மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
Full Web Building Tutorials - ALL FREE!
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children.
Let us learn Tamil,English,Kannada,Telungu,Malayalam and Urudu and also teach our children. . Click on the picture.
தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் மூலம், தமிழைகயும் மற்ற ஆங்கிலம்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் மற்றும் உருது மொழிகளைக் கற்று, நமது குழந்தைகளுக்கும் போதிப்போம். . படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Great jollyboy Videos
Great jollyboy Videos gives great entertainment.
Please visit and know the truth about the world.
Google Search

Custom Search
Click the Title “Daily Astrology and Forecast” and add your date of Birth.
click on the Rail Picture.
Subscribe to:
Post Comments (Atom)
மயிலாடுதுறை ரமணியின் ஜோக்குகள் வார இதழ்களில் வெளியானவையும், "எங்கள் பாரதம்" மாத இதழ்களும்.
Mayiladuthurai Temples.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment